<?xml version="1.0" encoding="utf-8" ?><rss version="2.0">  <channel>    <title>மரத்தடி.காம் (maraththadi.com)</title>    <link>http://www.maraththadi.com/</link>    <description>Web site for Maraththadi Yahoo! group http://groups.yahoo.com/group/maraththadi</description>    <language>ta</language>    <category>WebZine - Tamil</category>    <image>		<url>http://www.maraththadi.com/images/maraththadi_rss_logo.gif</url>		<title>மரத்தடி.காம் (maraththadi.com)</title>		<link>http://www.maraththadi.com</link>	</image>    <lastBuildDate>Fri, 9 May 2008 06:59:34 GMT</lastBuildDate><item>	<title>நாயக் - சத்யஜித் ரே - சுரேஷ் கண்ணன்</title>	<link>http://www.maraththadi.com/article.asp?id=2951</link>	<description><![CDATA[<B>ஒ</B>ரு நடிகரின் அக, புறச் சிக்கல்களை இவ்வளவு கூர்மையாக, நெருக்கமாக அவதானித்த திரைப்படத்தை இதுவரை நான் கண்டதில்லை. சத்யஜித்ரே என்கிற திரைப்பட மேதையால் இது சாத்தியமாகியிருக்கிறது. திரைப்பட உலகை, அதன் மாந்தர்களை சித்தரித்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெகு சொற்பமே. தமிழ்த்திரைப்பட உலகில், இவ்வாறு எடுக்கப்படும் படங்கள் 'சென்டிமென்ட்டுக்கு' எதிரானதாகவே கருதப்படுகிறது, அவை பொதுவாக வணிகரீதியாக வெற்றி அடையாததால். நட்சத்திரம், கல்லுக்குள் ஈரம், ஒரு வீடு, இருவாசல், என்று சில படங்கள் நினைவுக்கு வருகின்றன.]]></description>	<pubDate>Sat, 15 Dec 2007 00:00:00 GMT</pubDate></item><item>	<title>பாரதி என்னும் துரதிருஷ்டசாலியின் நினைவுக்கு - சந்திரசேகரன் கிருஷ்ணன்</title>	<link>http://www.maraththadi.com/article.asp?id=2950</link>	<description><![CDATA[<i>"என்னவோ தெரியவில்லை. சிலருக்கு தான் அப்படிபட்ட ஜாதகம் அமைகிறது. கொஞ்சம் அதிகப்படியாகவே துரதிருஷ்டம் செய்தால் தான் இப்படி பட்ட ஜாதகம் அமையக்கூடும்.]]></description>	<pubDate>Sat, 15 Dec 2007 00:00:00 GMT</pubDate></item><item>	<title>எவனோ ஒருவன் - சுரேஷ் கண்ணன்</title>	<link>http://www.maraththadi.com/article.asp?id=2949</link>	<description><![CDATA[<B>'க</B>ல்லூரி' திரைப்படத்திற்கு போவதென்று முடிவாயிற்று. வழக்கமாக நான் திரைப்படங்களை வந்த புதிதில் பார்க்க விரும்புவதில்லை. அதன் ஆரவாரங்கள் அடங்கும் வரை காத்திருப்பேன். குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இது நிகழ்ந்தது. 'அழகிய தமிழ் மகன்'.. போகலாம் என்று தொண தொணத்துக் கொண்டிருந்த மகளை "அந்தப்படம் பார்த்துவிட்டு நூறு பேர் மனநல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம்" என்று நல்ல பொய் சொல்லி அடக்கியாயிற்று. 'காதல்' திரைப்பட இயக்குநரின் அடுத்த படம் மீது எனக்கும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் தேவி திரையரங்கம் எங்களை 'housefull' பலகையுடன் இனிதே வரவேற்றது. சினிமாவுக்கு என்று கிளம்பி வெறுமனே வீடு திரும்புவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடைய விஷயமில்லை அல்லவா? வேறு 'நல்ல' படத்திற்காக தேடியதில் பக்கத்திலிருந்த அரங்கிலிருந்த இந்தப்படம் கண்ணில் பட்டது. அதுவும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால் இப்படியொரு சிறந்த படத்தை காண்பது இன்னும் தாமதப்பட்டிருக்கும். ]]></description>	<pubDate>Sat, 15 Dec 2007 00:00:00 GMT</pubDate></item></channel></rss>